இராணுவ வீரரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய தேரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டவர் கனகராயகுளம் இராணுவ முகாமில் சேவை புரிந்து வந்த இராணுவ வீரர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இரணுவ வீரர் மற்றும் தேரரும் பேஸ்புக்கின் ஊடாக நட்பை ஏற்படுத்தியுள்ளமை தெரியவந்துள்ளது.
பின்னர் குறித்த இராணுவ வீரர், கொத்மலை பிரதேசத்தில் மொழி பயிற்சியை பெற்று கொள்வதற்கு தேரரின் அழைப்பை ஏற்று மாதம்பே பிரதேசத்தில் உள்ள விகாரையொன்றில் இரண்டு நாள் தங்கியிருந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
பின்னர் மொழி பயிற்சி மையத்தில் இருந்து அந்த நபர் நோய்வாய்ப்பட்ட நிலையில் கம்பளை ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதன்போது குறித்த நபர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
பின்னர் மாதம்பே காவற்துறையினால் கைது செய்யப்பட்ட அந்த தேரர், நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
0 comments:
இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்
Tell us what you're thinking... !